தமிழகத்தில் சில அருவிகள் இருந்தாலும் கூட சில மாதங்களில் மட்டுமே அருவியில் நீர் வரும். திற்பரப்பு அருவியில் எல்லா நாட்களிலும் நீர் வரத்து அருமையாக இருக்கிறது. திற்பரப்பு அருவியானது கன்னியாகுமரி மாவட்டத்தில் குலசேகரம் என்ற இடத்தில் இருந்து 5கி .மீ தொலைவில் உள்ளது .திருவந்தபுரத்தில் இருந்து 85 கி .மீ தொலைவில் இருக்கிறது.இந்த அருவிக்கு குமரி குற்றாலம் என்று மற்றொரு பெயர் உண்டு .
Nov 27, 2012
திற்பரப்பு அருவி
தமிழகத்தில் சில அருவிகள் இருந்தாலும் கூட சில மாதங்களில் மட்டுமே அருவியில் நீர் வரும். திற்பரப்பு அருவியில் எல்லா நாட்களிலும் நீர் வரத்து அருமையாக இருக்கிறது. திற்பரப்பு அருவியானது கன்னியாகுமரி மாவட்டத்தில் குலசேகரம் என்ற இடத்தில் இருந்து 5கி .மீ தொலைவில் உள்ளது .திருவந்தபுரத்தில் இருந்து 85 கி .மீ தொலைவில் இருக்கிறது.இந்த அருவிக்கு குமரி குற்றாலம் என்று மற்றொரு பெயர் உண்டு .
Nov 23, 2012
குடிகார குப்பன்களும் பெண்ணியமும்
Nov 15, 2012
வியப்பை தரும் நூலகங்கள்
"கற்றது கை மண் அளவு ,கல்லாதது உலக அளவு " என்ற ஔவையின் வாக்கு படி ,நம் கற்கும் கல்வி நூல் புத்தகத்தோடு நின்று விடாமல் அறிவை மேம்படுத்தி கொள்ளவும், உலகத்தின் பல திறன்களை கற்று கொள்ளவும் உதவுவது நூல்களே.இன்று வாசிக்கும் பழக்கம் மக்களிடையே குறைந்து வருகிறது. தேவைப்படும் புத்தகத்தை எல்லோரும் விலை கொடுத்து வாங்கிட இயலாது.நூலகத்தில் அடிப்படை உறுப்பினராக சேர்ந்து பிறகே நூல்களை இரவல் பெற முடியும் என்பது யாவரும் அறிந்ததே .நம் நாட்டின் நூலக சேவைகளுக்கும் வெளி நாடுகளுக்கும் உள்ள நூலகதிற்கும் ஒரு ஒப்பீடு தான் இந்த பதிவு .
Nov 11, 2012
நாடோடிகளின் வாழ்க்கை
இந்திய சுதந்திரம் அடைந்து பல 65 வருடங்கள் ஆகி விட்டன . பல குடும்பங்கள் சில கூடாரங்களுடன் பொது இடங்களில் தங்கி வாழ்ந்து வருவதை நான் சிறு வயதில் இருந்து பார்த்திருக்கிறேன்.விவசாய காலங்களில் மட்டுமே காண முடியும்.அவர்கள் பேசும் மொழி தெலுங்கு ஆனாலும் நாம் பேசும் தமிழ் மொழியை நன்றாக புரிந்து கொண்டு பதில் அளிப்பார்கள் .அவர்கள் பார்வையில் இருந்து பார்த்தல் தான் இழந்தது எவ்வளவு என்று உண்மையான நிலைமை புரியும்..சொந்த நாட்டில் இரண்டாந்தர வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று கேள்வி பட்டு இருக்கிறேன் ஆனால் நேரிலே பார்த்தபோது அவர்களுக்காகவும் அது போல உள்ள நாடோடி மக்களுக்கும் இந்த பதிவு.
Nov 8, 2012
விவசாயிகள் எனும் ஏமாளிகள்
இந்திய நாடு மற்ற ஐரோப்பிய நாடுகளை போல தொழில் புரட்சி உள்ள நாடல்ல ,மாறாக 70 சதவிகிதம் விவசாய நாடு .நாம் தற்போது விவசாயத்தில் தன்னிறைவு அடைந்தாலும் வளரும் இந்தியாவின் எதிர்காலம் உணவு பற்றாக்குறை கண்டிப்பாக வரகூடிய காலம் அதிக தூரமில்லை .வெளிநாடுகளுக்கு சென்று பல வருடங்களுக்கு பின்னர் கிராமத்தை பார்க்கும் போது புறக்கணிக்கப்பட்ட விவசாயம் ,கிராமத்தின் சூழ்நிலை இந்த பதிவை எழுத துண்டியது.இது முழுக்க சிறு விவசாயிகள் பற்றி ஒரு சிலர் அறிந்து இருந்தாலும் பலர்க்கு தெரிய வாய்ப்பில்லை .
Nov 3, 2012
மருத்துவமனை அவலங்கள்
மனிதர்களுக்கு நோய் வராதவரை தான் நிம்மதி.வந்து விட்டால் காசு , உறவு , இருந்து நிம்மதி வரை எல்லாமே போய்விடும் .இல்லாதவர்கள் கூடநோய் வந்தால் உடனே நாம் நாடுவது தனியார் மருத்துவ மனைகளை தான் , ஏன் என்றால் அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர் இல்லாமையும் ,செவிலியர்களின்(nurse) அலட்சியமான கவனிப்பும் ,செயல் பாடுகளும் , மோசமான சுகாதாரமும் தான் என்பது அனைவருக்கும் தெரிந்த ஓன்று தான். பெரிய தனியார் மருத்துவமனைக்கு சென்றால் மடியில் பெரிய பொட்டலமாக பணத்தை கட்டி கொண்டு தான் செல்ல வேண்டி இருக்கும்.ஒரு சில நல்ல மருத்துவமனைகளும் ,மருத்துவர்களும் இதற்கு விதி விலக்கு.
Subscribe to:
Posts (Atom)