Dec 22, 2012

ஆபத்தான வேலைகள் ஒரு பார்வை



             காணி நிலம் வேண்டும் என்ற பாரதியின் கனவு இன்று மட்டும் இருந்திருந்தால் காண நிலம் வேண்டும் பாடி இருப்பார்.மக்கள்  வசதிகளையும் ,தேவைகளையும்  பூர்த்தி செய்ய கிராமங்களை  விட்டு நகரை நோக்கி குடி பெயர தொடங்கி விட்டதால் நகரத்தில் இன்று இட  பற்றாக்குறை  தீர்வு அடுக்கு மாடி குடியருப்புகள் .புதியதாக  கட்ட பட்டு வரும் அடுக்கு மாடி குடியருப்பு அருகே  செல்லும் போது வர்ணம்(Painting) பூசி கொண்டு இருந்தார்கள் .மிக உயரத்தில் எந்த  பாதுகாப்பு  சாதனமும் இல்லாமல்  அவர்கள் (Painter) வேலை செய்து கொண்டு இருப்பதைமனம் வருத்தப்பட்டேன்  .அவர்கள் வேலை செய்வதை படம் பார்க்க .

Dec 19, 2012

தொ(ல்)லைகாட்சி பெட்டியினால் வந்த தீ விபத்து

   தீ விபத்துகள் பெரும்பாலும் கவனக்குறைவாகவே     நிகழ்ந்து இருக்கிறது. தீ விபத்துகள் மின் கசிவு , சமையல் எரிவாயு குழாய் வெடிப்பு ,பட்டாசு வெடிப்பு,சிலர் வேண்டும் என்றே ஏற்படுத்திய தீ விபத்துகள் என்று பல நிகழ்வுகள் செய்தி தாள்களில் படித்து இருக்கிறோம் .ஆனால் தொ(ல்)லைகாட்சி பெட்டியினால் வந்த தீ விபத்து  பார்த்த போது கொஞ்சம் அதிர்சியாக இருந்தது.மனித தவறுகளில் தான் என்றாலும் தவிர்த்து இருக்கலாம் .எல்லோருக்கும் பயன்படுமே என்று தான் இந்த பதிவு.





Dec 6, 2012

ஒரு தலை காதல் ஆபத்தானதா?

        காதல்  என்பது அனைவருக்கும் பருவ வயதில் வருவது தான் ,அதை ஏற்பதும் மறுப்பதும் பெண்ணின் விருப்பமே . ஒரு தலை   காதல் தோல்வியால் கல்லூரி மாணவர் சக மாணவியைபேருந்து நிலையத்தில் வைத்து  கத்தியால்  குத்திய அதிர்ச்சியான நிகழ்வை உறவினர் பார்த்திருக்கிறார்.முதுகலை பட்ட படிப்பை படித்து கொண்டிருக்கும் மாணவர்  இப்படி ஒரு  செயலை செய்திருப்பது  இளைய தலைமுறை எங்கே செல்கிறது கேள்வியை எழுப்புகிறது .ஒரு தலை காதல்   பற்றியதே இந்த பதிவு .

Dec 4, 2012

வெளிநாட்டு வங்கிகளின் சேவையும் , நண்பரின் வங்கிஅட்டை திருட்டும்

              வெளிநாடுகளில் உள்ளவங்கிகளின் சேவைகள் பற்றி வெளிநாட்டில் வசிக்கும்  நண்பர்களுக்குதெரிந்தது தான் இருந்தாலும் புதிய செய்திகள் இருந்தால் தெரிவிக்கவும் .உள்நாட்டில் உள்ள வங்கிகளின் சேவைகளை முதல்பகுதியில் பார்த்தோம் .பார்க்காதவர்கள்  விருப்பம் இருந்தால் பார்த்து விட்டு வரவும் .உறவுகளை விட நண்பர்களை தான் நாம் அதிகம் நம்புவோம் .நல்ல நண்பர்களில்  சில புல்லுருவிகள் இருப்பது எதிர் பாரத ஓன்று .

Dec 2, 2012

வங்கிகளின் சேவைகள் -வெளிநாடும் உள்நாடும்

   மனிதனுக்கு வாழ்வாதரமே    பணம் .பணம்  அதிகம் சம்பாதிப்பவர் யாரும்
பணக்காரர் ஆவதில்லை .அதிகமாக சேமிப்பவரே செல்வந்தர் ஆகமுடியும் .செல்வத்தின் மதிப்பினை வள்ளுவரும் செல்வந்தரை எல்லோரும் புகழ்வார் .இல்லாதவரை திறமைகள் இருந்தாலும் கண்டு கொள்ள மாட்டார்கள் .
 
                    இல்லாரை  எல்லோரும்  எள்ளுவர் செல்வரை 
                     எல்லோரும்  செய்வர்  சிறப்பு . 
   வெளிநாட்டு வங்கிகளுக்கும் நம் நாட்டு வங்கிகளுக்கும் உள்ள நிறை,குறை சேவைகளை  பற்றிய ஒரு ஒப்பிடு தான் இந்த பதிவு.          

Nov 27, 2012

திற்பரப்பு அருவி




    தமிழகத்தில் சில அருவிகள் இருந்தாலும் கூட சில மாதங்களில் மட்டுமே அருவியில்  நீர் வரும். திற்பரப்பு அருவியில் எல்லா நாட்களிலும் நீர் வரத்து அருமையாக இருக்கிறது. திற்பரப்பு அருவியானது  கன்னியாகுமரி மாவட்டத்தில் குலசேகரம் என்ற இடத்தில் இருந்து 5கி .மீ  தொலைவில்  உள்ளது .திருவந்தபுரத்தில் இருந்து  85 கி .மீ  தொலைவில் இருக்கிறது.இந்த அருவிக்கு குமரி குற்றாலம் என்று மற்றொரு பெயர் உண்டு .

Nov 23, 2012

குடிகார குப்பன்களும் பெண்ணியமும்

         விருந்து  உபசரிப்புகள்  ,நண்பர்களின் மகிழ்சியை பகிர ஆரம்பிக்கும் உற்சாக பானம் பீர்லில் தொடங்கி  கடைசியில் பிராந்தி ,விஸ்கி முடிகிறது.மனிதன் எதையுமே பத்து நாட்கள் தொடர்ந்து  செய்தால் அதுவே பழக்கமாக மாறிவிடுகிறது .கவலையை மறக்க ஆரம்பிக்கும் குடி பின் பழக்கமாக மாறிவிடுகிறது.குடிகாரர்களின் நண்பர்கள் வட்டமும் அப்படியே அமைந்து இருக்கும்.குடிக்க பணம் கிடைக்காத போது  கொடுக்காத மனைவியையும் ,தாயையும் அடிக்கவும் ,துன்புருத்துதவும் தயங்குவதில்லை .தினசரி பார்க்கின்ற காட்சியின் பிரதிபலிப்பு இந்த பதிவு .

Nov 15, 2012

வியப்பை தரும் நூலகங்கள்

     "கற்றது கை மண் அளவு ,கல்லாதது உலக அளவு " என்ற ஔவையின் வாக்கு படி ,நம் கற்கும் கல்வி நூல் புத்தகத்தோடு நின்று விடாமல் அறிவை மேம்படுத்தி கொள்ளவும், உலகத்தின் பல திறன்களை கற்று கொள்ளவும்  உதவுவது நூல்களே.இன்று வாசிக்கும் பழக்கம் மக்களிடையே குறைந்து வருகிறது. தேவைப்படும் புத்தகத்தை  எல்லோரும் விலை கொடுத்து வாங்கிட இயலாது.நூலகத்தில் அடிப்படை உறுப்பினராக சேர்ந்து  பிறகே நூல்களை இரவல் பெற முடியும் என்பது யாவரும் அறிந்ததே .நம் நாட்டின் நூலக சேவைகளுக்கும்  வெளி நாடுகளுக்கும் உள்ள நூலகதிற்கும்  ஒரு ஒப்பீடு தான் இந்த பதிவு .

Nov 11, 2012

நாடோடிகளின் வாழ்க்கை

        இந்திய சுதந்திரம்  அடைந்து பல    65        வருடங்கள்  ஆகி விட்டன .  பல குடும்பங்கள்  சில கூடாரங்களுடன் பொது இடங்களில் தங்கி வாழ்ந்து வருவதை நான் சிறு வயதில் இருந்து பார்த்திருக்கிறேன்.விவசாய காலங்களில் மட்டுமே காண முடியும்.அவர்கள் பேசும் மொழி தெலுங்கு ஆனாலும் நாம் பேசும் தமிழ் மொழியை நன்றாக புரிந்து கொண்டு பதில் அளிப்பார்கள் .அவர்கள் பார்வையில் இருந்து பார்த்தல் தான்  இழந்தது எவ்வளவு  என்று  உண்மையான நிலைமை புரியும்..சொந்த நாட்டில் இரண்டாந்தர வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று கேள்வி பட்டு இருக்கிறேன்  ஆனால் நேரிலே பார்த்தபோது அவர்களுக்காகவும் அது போல உள்ள நாடோடி மக்களுக்கும்  இந்த பதிவு.

Nov 8, 2012

விவசாயிகள் எனும் ஏமாளிகள்

    இந்திய நாடு  மற்ற ஐரோப்பிய நாடுகளை போல தொழில் புரட்சி   உள்ள நாடல்ல ,மாறாக 70 சதவிகிதம்  விவசாய நாடு .நாம் தற்போது விவசாயத்தில் தன்னிறைவு அடைந்தாலும் வளரும் இந்தியாவின் எதிர்காலம் உணவு பற்றாக்குறை கண்டிப்பாக வரகூடிய காலம் அதிக தூரமில்லை .வெளிநாடுகளுக்கு சென்று பல வருடங்களுக்கு பின்னர்  கிராமத்தை பார்க்கும் போது புறக்கணிக்கப்பட்ட விவசாயம் ,கிராமத்தின் சூழ்நிலை இந்த பதிவை எழுத துண்டியது.இது முழுக்க சிறு விவசாயிகள் பற்றி ஒரு சிலர் அறிந்து இருந்தாலும் பலர்க்கு தெரிய வாய்ப்பில்லை .

Nov 3, 2012

மருத்துவமனை அவலங்கள்

         மனிதர்களுக்கு நோய்  வராதவரை தான் நிம்மதி.வந்து விட்டால் காசு , உறவு , இருந்து நிம்மதி வரை எல்லாமே போய்விடும் .இல்லாதவர்கள் கூடநோய் வந்தால் உடனே நாம் நாடுவது தனியார் மருத்துவ மனைகளை தான் , ஏன் என்றால் அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர் இல்லாமையும் ,செவிலியர்களின்(nurse) அலட்சியமான கவனிப்பும் ,செயல் பாடுகளும் , மோசமான சுகாதாரமும் தான் என்பது அனைவருக்கும் தெரிந்த ஓன்று தான். பெரிய தனியார் மருத்துவமனைக்கு சென்றால்  மடியில் பெரிய பொட்டலமாக பணத்தை கட்டி கொண்டு தான் செல்ல வேண்டி இருக்கும்.ஒரு சில நல்ல மருத்துவமனைகளும் ,மருத்துவர்களும்  இதற்கு விதி விலக்கு.

Oct 28, 2012

நச்சு வாயுக்கள் ஒரு அறிமுகம்

     உலகத்தில் தயாரிக்கபடும் பொருள் அனைத்தும் இந்த பயன்பாட்டுக்கு என்று வடிவமைக்கப்படும் .நண்பர் இல்ல திருமணதிற்கு சென்றிருந்த போது திருமண மண்டபத்தில் காற்றாடி(blower fan) பார்த்த போது வெளிநாட்டினர் உபயோகத்தையும் ,இங்கு நாம் பயன் படுத்தும் விதமும் வித்தியாசமான அணுகுமுறை இருக்கிறது(மேலேயுள்ள புகைப்படம் பார்க்க ).மாறுபட்ட கோணத்தில்  தான்  புதிய  கண்டுபிடிப்புகள் கண்டுப்பிடிக்கப்படுகிறது.இந்த காற்றாடியின் (blower fan) உண்மையான முழுப்பயன்  பற்றி இந்த பதிப்பில் குறிப்பிடுகிறேன்.

Oct 25, 2012

கொசுவிரட்டிகள் வரமா -சாபமா ?

 
        மழை காலம் வந்தாலே கொசுக்களின் தொந்தரவு தாங்க முடியாது.வீட்டில்கொசுக்களுடன் பெரிய போரட்டமே நடத்த வேண்டி இருக்கும். கொசுக்களின்  ஒழிப்பு முறை பற்றியும் ,அதனால் வரும் நோய்கள் பற்றியும்   இரத்த திருடர்கள்  முந்தைய பதிவில் எழுதி இருந்தேன் ,பார்க்காதவர்கள் படித்து விட்டு வரவும்.மக்கள் வீட்டில்உள்ள  கொசுக்களை விரட்ட சந்தைக்கு வந்திருக்கும் ஆல் அவுட் ,மார்டின் , டோர்டிசே பல நிறுவனங்களின் கொசு விரட்டிகளை பயன்படுத்தி வருகிறோம் .இந்த கொசு விரட்டிகளின் துண்டறிக்கை ஓன்று இருக்கும் .அதை நாம் எத்தனை  பேர் படித்து இருப்போம் .!சில பாதிக்க பட்டவர்களுக்காக இந்த பதிவு.

Oct 20, 2012

கொசுக்களும் ஒழிப்புமுறைகளும்

       மழை காலம் ஆரம்பித்த கொஞ்ச நாட்களில் பல நோய்கள்   மக்களை வழக்கம் போல தாக்க ஆரம்பித்துவிட்டன .அதில் புதிதகாக டெங்கு காய்ச்சல் சேர்ந்து கொண்டுள்ளது.மக்கள் முன்பு எல்லாம் உள்நாட்டின் உள்ள பகுதியில்  பயணம் செய்வதோடு சரி .அதனால் நோய்களும் அந்த பகுதியில் வசிக்கும் மக்களை மட்டுமே பரவும்.இப்போது மக்கள்  பணம் சம்பாதிப்பதற்காகவும் , தொழில்  செய்வதற்க்காவும்   வெளிநாட்டு விமான பயணம் மிக இன்றியமையாத ஒன்றாகிவிட்டது . வெளி நாடுகளில் இருந்து வரும்போது சிலர் தொற்று நோயை  கொண்டு வந்து விடுகிறார்கள்.இந்த தொற்று நோய்கள்  கொசுக்கள் மூலமாகவும் மனிதர்களை தாக்குகிறது.    கொசுக்களை பற்றி முதலில் பார்த்துவிடுவோம் பிறகு தடுக்கும் முறைகளை பார்ப்போம்.

Oct 17, 2012

பெண்களும் நகை திருட்டுகளும்

     பெண்களுக்கு நகை மேல் உள்ள ஆசை மட்டும் என்றுமே   குறையாது.  ஒரு சில பெண்கள் இதில் விதிவிலக்கு . அவர்கள்  திருமணத்திற்கு அல்லது முக்கிய நிகழ்சியின்   போது வீட்டில் உள்ள  நகைகளையும்   எல்லாம் அணிந்து கொண்டு மற்றவரிடத்தில் பெருமையையும் , செல்வம்  இருப்பதாய் காட்டி கொள்வதாக எண்ணுகிறார்கள்.இன்னும் சிலர் நகைக்கடை பொம்மை போல நகைகளை அணிந்து இருப்பர்.அதுவே ஆபத்தானது என்பதை உணர தவறி விடுகிறனர் .அதுவே திருடர்களுக்கு மிக சாதகமான சூழ்நிலைகளை ஏற்படுத்தி விடுகிறது.பாடுபட்டு சேர்த்த பணத்தில் கொண்டு வாங்கிய நகைகளை ஒரு சிலர் பாதுகாக்க தவறி விடுகிறார்கள் .தொடர்சியாக நடை பெற்ற திருட்டுகள் இப்படி ஒரு பதிவை எழுத துண்டியது.

Oct 14, 2012

சாலை விபத்துகளும் பாதுகாப்பும்- 2

இரண்டு நாட்களுக்கு முன் நான் பார்த்த ஒரு நிகழ்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .சாலையின் சந்திப்பில்  ( four wey junction)வழக்கம் போல மின்சாரம் இல்லாததால் போக்குவரத்து ஆய்வாளர் ஒருவரும் இரண்டு காவலரும் நின்று போக்குவரத்தை  முறைப் படுத்தினர்.மூன்று  இளைஞர்கள்  இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தவர்கள் ,  போக்குவரத்து ஆய்வாளர் நிறுத்துமாறு சொன்னார் .அவர்கள் நிற்காமல்  பயந்து ஒரு வழி பாதையில்( one wey)வாகனத்தை ஒட்டினர் . எதிரே பேருந்து வந்ததால் வாகனத்தை வேகமாக ஓட்ட முடியவில்லை , இதற்குள் நாம் சொல்லியும் கேளலாமல்  சென்றதால் கோபம் கொண்டு பாய்ந்த காவலர் ஒடியே  பிடித்து விட்டார்.அந்த இடத்திலேயே தர்ம அடி கொடுத்தார்.அவர்கள் மூவரும்மே  கல்லுரி மாணவர்கள் போல இருந்தனர்.   இதன் முதல் பகுதியை படிக்காதவர்கள் முந்தையப் பதிவை இங்கு படித்து விட்டு தொடரவும்

Oct 8, 2012

சாலை விபத்துகளும் பாதுகாப்பும் -1

 அன்றாடம் செய்திதாள்களில் அதிகரித்து வரும்  சாலை விபத்துகள் போக்குவரத்து துறைக்கு மிகப்பெரிய சவாலான விபரமாகும் . இந்தியாவின் சாலை குறை பாடுகளும் ,மனித்தவறுகளும் மிக முக்கியமான ஒன்று .பாதுகாப்பு விதிமுறைகளை மக்கள் மதிகிறார்களா ?வெளிநாடுகளின் விதிமுறைகளை  என்ன !இது  சாலை விபத்துகள் மக்களிடையே  விழிப்புணர்வுவை ஏற்படுத்தியுள்ளதா ? அதன் நிறை குறைகளை  பற்றிய ஒரு அலசல் .

Sep 29, 2012

முரண்பாடான பழமொழிகள்

நம் தாய் மொழியாம் தமிழ் மொழியில் சில வார்த்தைகளுக்கு பல அர்த்தமுண்டு .மேடை சிலேடை பேச்சுகளில் அண்ணாவை மிஞ்சியவர் யாரும் இல்லை.எல்லாமே நம் பயன்படுத்தக்கூடியதில் தான் இருக்கிறது  .நம் பேச்சு வழக்கில் ஒரு சில பழமொழிகளை  கூட தவறாக பயன்படுத்தி வருகிறோம் .அவற்றில்  "படிப்பது இராமாயணம்   இடிப்பது  பெருமாள் கோவில் " மற்றொன்று "ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் செய்யலாம் " என்பதையும் பற்றி பார்போம் .கல்யாணத்தில் ஒரு பொய் சொல்லி தப்பிக்கிறது பெரிய விபரம் , இதிலே ஆயிரம் பொய் சொல்லி எப்படி தப்பிக்கிறது .

Sep 24, 2012

இறந்தும் வாழ்பவர்கள்.

       மனிதன் பிறக்கும் போது மகிழ்சியாக கொண்டாடும் நாம் இறப்பு ஒன்றை எளிதில் ஏற்று கொள்வதில்லை .நாளையே மரணம் வந்தாலும் ஏற்றுக்கொள்ள கூடிய மனப்பக்குவம் யாரிடத்திலும் இருப்பதில்லை .வாழ்கையில்  இன்று கடைசி நாளாக  நாம் எண்ணி வாழ்பவர்கள் தான் வாழ்க்கையின் முக்கியதுவத்தை அறிந்தவர் எத்தனை பேர்.பிறப்பு முதல் இறக்கும் வரை தான் எத்தனை ஆட்டம் ,பாட்டம் எல்லாம் .ஆடி அடங்கும் வாழ்க்கையட  ஆறடி நிலமே சொந்தமட என்ற பாடலுக்கு பாடல் தான் நினைவுக்கு வருகிறது. ஆனால்  அதற்குள் மரணத்தில் பின்னால் அவர் ஏற்படுத்தி செல்லும் விளைவுகளை பற்றி ஒரு அலசல் .

Sep 21, 2012

நண்பர்கள் முத்துகளா அல்லது முட்களா ?

         ஒவ்வொரு மனிதருக்கும் பொதுவாக அவர்களுடைய  நட்பு வட்டத்தை வைத்து தான் அவரை மதிப்பீடு செய்கிறார்கள். நட்பின் இலக்கணதிற்கு கோபெரும் சோழனும் ,பிசிராந்தையாரும் தான் நினைவுக்கு வருவார்கள் .பார்க்காமல் காதல் போல பார்க்காமலே நட்பு விசித்திரமான ஒன்று .நல்ல நண்பர்கள்  அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் எனலாம்.நல்ல நட்பின் வகைகளை இந்த பதிப்பில் பார்போம்  . இன்றும்  உங்கள் நட்பை பாராட்டும் நண்பர்கள் பலர் இருக்கலாம் .அதில் ஒரு சிலர் விதிவிலக்கு .நல்ல நண்பர்கள் கிடைதிருந்தால் என் நிலைமை நன்றாக இருந்திருக்குமே  என்று மனதினுள் சொல்பவர்க்கு இந்த பதிவு .

Sep 19, 2012

மனிதன் என்னும் போர்வையில்


        புத்தாண்டு கொண்டாட்டங்கள் இந்தியாவின் பல நகரங்களில் கோலாகலமாக கொண்டப்படுகிறது .சிங்கையில்  ஒரு சில மக்களின் பண்பில்லாத அனுபவத்தை குறிப்பிடுகிறேன் .இப்படி பட்டகசப்பான அனுபவம் உங்கள் யாருகேனும் நடந்து  இருக்கலாம் .சிங்கப்பூரில் ஆங்கில புத்தாண்டு   கொண்டாட்டம் ஒவ்வொரு வருடமும் மிக்க சிறப்பாக கொண்டப்பட்டு வருகிறது.இதில் ஒர்சிட் சாலை தான்  புத்தாண்டு   கொண்டாட்டம் அதிகமாக இருக்கும் .இந்த ஒர்சிட் சாலை தான் சிங்கையில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது ,இதில் தான் பல நாடுகளின் தூதரகங்களும் ,ஐந்து நட்சத்திர விடுதிகளும் ,கடை தொகுதிகளும் , உயர்ந்த கட்டிடங்களும் உள்ளது.

Sep 6, 2012

இலவசம் அனுதாபங்கள்

     தீப ஒளி  திருநாள் என்றாலே நாம் நினைவுக்கு வருவது இனிப்பு வகைகளும் ,புது துணிகளும் ,பட்டாசுகளும் தான் .சிறுவர்கள் அனைவருக்கும்   பட்டாசுகளை தவிர வேறு எதுவுமே வேண்டாம் .  உலக அளவில் சீனாவுக்கு அடுத்த படியாக இந்தியாவில் இருந்து தான் பட்டாசுகள் ஏற்றுமதி செய்யபடுகிறது .சிவகாசி என்றாலே பட்டாசு தான் நினைவுக்கு வரும் .ஒவ்வொரு வருடமும் நாம் பட்டாசு வங்கி வெடிகிறோமோ இல்லையோ பட்டாசு தயாரிக்கும் தொழில்சாலைகளில்  பட்டாசு வெடித்து பலர் இறப்பது வாடிக்கையான ஒன்றாகி விட்டது .

Sep 4, 2012

இரண்டாம் உலகப்போர் -- பகுதி 1

        உலக வரலாற்றில் பல போர்கள் நடைபெற்றது ,ஆனாலும் இரண்டாவது உலகப்போருக்கு தனி இடம் உண்டு. காரணம் போர் என்பது தனி இரு நாடுகள் சண்டை இடுவது ஆனால் உலக நாடுகள் இரு அணிகளாக உலகத்தின் பல பகுதிகளில் நடந்த சண்டையில் உயிர் சேதமும் ,பொருட்செய்தமும் கணக்கிட முடியாதவை . யூத இனத்தவர்களில்  பாதிபேர் காணாமல்போனதும்,மக்களில் ஒரு மில்லியன்  அதிகமாகனோர் அகதிகளாகவும்,நோயாளிகளாவும்   பல சிரமங்களுக்கு உள்ளானார்கள்.

Aug 16, 2012

சுதந்திரம் பெற்றதும் கொடுத்ததும்- 1

        இந்தியா  சுதந்திர தின விழாவை ஆகஸ்ட் 15 ல்  சிறப்பாக கொண்டாடியது .  இந்தியா 300 ஆண்டுகளுக்கு மேல் ஐரோப்பிய நாடுகளிடம் அடிமையாக இருந்திருகிறது .இதில் 200 ஆண்டுகளுக்கு மேல் இங்கிலாந்து வைத்திருந்ததுஆனால் இங்கிலாந்து சுதந்திரத்தை கொடுத்ததா ? இல்லை  நாம் போராடி பெற்றோமா ? என்பதே.அதற்கு   முன் நம் இந்தியாவை பற்றி ஒரு பார்வை .

Jul 27, 2012

ஈஸ்ட்டர் தீவு

       உலக வரலாற்றில் அதிசய நிகழ்வுகள்  மர்மங்கள் பல உண்டு .அவற்றில் ஈஸ்ட்டர் தீவு  என அழைக்கபடும் பொலினீசியத் தீவு பற்றியது .இந்த தீவு சிலி தீவிலிருந்து 3,200 கி.மீ தள்ளி உள்ளது .இது கி.பி.1722இல் ஜேகப் ரகவீன் என்பவரால்  ஈஸ்ட்டர் தினத்தன்று கண்டு பிடிக்கப்பட்டதால் ஈஸ்ட்டர் தீவு என அழைக்கப்படுகிறது.இதன் பரப்பு 640 சதுர கி. மீ  ஆகும் .

Jul 23, 2012

இரத்த தானம்

                           நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

        மனிதன் ஆரோக்கியமாக வாழ உடல் நலம் முக்கியமானது .அந்த  உடல் நலமாக இருக்க உடலில் உள்ள உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் .அந்த உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க ரத்தத்தின்  பங்கு முக்கியமானது .ரத்தம்  உடலில் உள்ள  அசுத்த ரத்தத்தை இருதயத்திற்கு  எடுத்து சென்று  நல்ல  ரத்தத்தை உடலில் உள்ள உறுப்புகளுக்கு கொடுக்கிறது இதனால் தான் நாம் சுறுசுறுப்பாகவும் இளமையாகவும் இருக்க முடிகிறது  

Jul 20, 2012

மதுரை அன்றும் இன்றும்

          மதுரை என்றதுமே நினைவில் வருவது மீனாட்சியம்மன் கோவிலும் , திருமலை நாயக்கர்  மஹால், வண்டியூர் தெப்பகுளம், வைகை ஆறு ,அரசு பொது மருத்துவமனையும் தான் .தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகை உள்ள நகரம் .

 உயர் அதித வசதிகள் கொண்டஇந்திய முன்னணி மருத்துவமனைகள் ,விமான நிலையம் , உச்ச நீதிமன்றம் ,கல்லூரிகள் , தொழில்சாலைகள்  ,சாலைகள் மற்றும் பல  இருந்தும் சுகாதாரம் கேள்விக் குறியாக இருக்கிறது.

Apr 6, 2012

பொன்மொழிகள்

 1.ஓடும் நீராக நீ இருக்கும்போது
உள்ளத்திலே அழுக்கு இருக்காது!


2.ஒன்றை இழந்து தான்
மற்றொன்றைப்பெற முடியும்


3.சிந்திப்பவன் முட்டாள் ஆகுவதில்லை!
  முட்டாள்கள் சிந்திப்பதில்லை!